பாலத்தின் தடுப்பு சுவர் சீரமைக்கப்படுமா?

Update: 2025-06-01 15:50 GMT

மதுரை பழங்காநத்தத்தை அடுத்த வசந்தம் நகர் - எல்லீஸ்நகர் இடையே உள்ள பாலத்தின் பக்கவாட்டு தடுப்பு கம்பிகள் மற்றும் சுவர் அனைத்தும்  முற்றிலுமாக சேதமடைந்து பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. இதனால் அப்பாலத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே பயணிக்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பாலத்தில் ஆய்வு மேற்கொண்டு  சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்