மதுரை பைபாஸ் ரோடு துரைசாமி நகர் மற்றும் ராம்நகர் சந்திப்பில் அதிவேகமாக வாகனங்களை இயக்கி செல்கின்றனர். இதனால் சாலையை கடந்து செல்ல பெண்கள், முதியோர்கள் மிகவும் சிரமம அடைகின்றனர். மேலும் இதனால் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் விபத்துகளை தவிர்க்க வேகத்தடை அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.