தஞ்சையை அடுத்த திருக்காட்டுப்பள்ளி அருகே விண்ணமங்கலம் பகுதியில் வெண்ணாறு பாய்ந்தோடுகிறது. இந்த ஆறு தூர்வாரப்படாமல் புதர்மண்டி கிடக்கிறது. செடி,கொடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் நீர்வழிப்பாதையில் தடை ஏற்படுகிறது. இதன்காரணமாக விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள ஆற்றை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.