திருவள்ளூர் மாவட்டம், கதிர்மேடு பெத்தாணியா நகர் பகுதிகளில் நாய்கள் அதிகமாக உள்ளது. இதனால் புதிதாக வருபவர்கள் மற்றும் தபால் கொண்டு வருபவர்கள் தெருவில் செல்ல முடியாத அளவிற்கு நாய்கள் குரைத்து கொண்டும், சில சமயம் கடிக்கவும் வருகிறது. எனவே, பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் நலன் கருதி நகராட்சி அதிகாரிகள் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.