சர்வதேச சுற்றுலா தலமான ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்கா உள்ளது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த பூங்காவில் பழைய கழிப்பறைகளை அகற்றிவிட்டு புதிய கழிப்பறைகள் கட்டப்படுகிறது. ஆனால் அந்த பணிகள் நீண்ட நாட்களாக மந்த கதியில் நடைபெறுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் சிரமம் அடைகின்றனர். எனவே பணியை விரைந்து முடிக்க தோட்டக்கலைத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.