அடிப்படை வசதி வேண்டும்

Update: 2025-06-01 10:06 GMT

ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் செயல்படும் ஆதார் மையங்களில் ஆதார் அட்டை பதிவு, புகைப்படம் எடுக்க போதிய பணியாளர்கள் இல்லை. இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் அங்கு இருக்கைகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை. எனவே ஆதார் மையங்களில் கூடுதல் பணியாளர்களை நியமிக்கவும், அடிப்படை வசதிகளை செய்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்