ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பஸ் நிலையத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லை. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்கும் சூழல் நிலவுகிறது. இதனால் குழந்தைகள், பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பக்தர்களின் சிரமத்தை போக்கும் வகையில் இவ்வழித்தடங்களில் கூடுதலாக பஸ் இயக்க வேண்டும்.