ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பேக்கரும்பில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மணிமண்டபம் முன்பு சிறு மழை பெய்தாலும் தண்ணீர் குளம் போல் தேங்கிவிடுகிறது. இதனால் மணிமண்டபத்தை காண வரும் சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே இப்பகுதியில் மழை காலங்களில் தண்ணீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?