காடுபோல் காட்சி அளிக்கும் சுடுகாடு

Update: 2025-05-25 11:34 GMT

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே நடையனூர் பகுதியில் சுற்று வட்டார பகுதிகளில் இறந்தவர்களின் உடலை புதைப்பதற்கும், எரிமேடையில் வைத்து எரிப்பதற்கும் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுச்சுவருடன் கூடிய மயானம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த மயானத்தை சுற்றிலும் ஏராளமான செடி- கொடிகள் முளைத்து காடுபோல் காட்சி அளிக்கிறது. இதனால் இறந்தவர்களின் உடல்களை எரிக்க முயாமல் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்