விருதுநகர் மாவட்டம் சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை வசதி இல்லை. இதனால் பயணிகள் மழை மற்றும் வெயிலில் காத்து நிற்கும் நிலை ஏற்பட்டள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகுவும் சிரமமடைகின்றனர். எனவே பயணிகள் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.