பண்ருட்டி அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு தற்போது போதிய இடவசதி இல்லாததால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே மருத்துவமனை விரிவாக்கம் செய்யும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?