கடமலைக்குண்டுவை அடுத்த தர்மராஜபுரத்தில் அமைக்கப்பட்ட சலவை கூடம் பராமரிப்பு இல்லாதததால் சேதமடைந்து வருகிறது. மேலும் சலவை கூடத்தை சுற்றிலும் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. எனவே புதர்மண்டி கிடக்கும் சலவை கூடத்தை சீரமைத்து விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.