பெரம்பலூர்- துறையூர் சாலையில் நகராட்சிக்கு சொந்தமான தெப்பக்குளம் உள்ளது. இந்த தெப்பக்குளத்தின் கரையோரத்தில் சிலர் இரவு, பகல் நேரத்தில் மது அருந்தி வருகின்றன. மேலும் அவர்கள் மது குடித்துவிட்டு காலி மது பாட்டில்களை தெப்பக்குளத்தில் வீசிவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் இப்பகுதியில் சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.