பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறுவர் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள உபகரணங்கள் சிதிலமடைந்து தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் இந்த பூங்காவிற்கு வரும் சிறுவர்கள் விளையாட முடியாமல் பெரிதும் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, சிதிலமடைந்து காணப்படும் உபகரணங்களை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.