சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இந்த நாய்கள் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் படுத்துக்கொள்கின்றன. இதனால் வாகனஓட்டிகள் பயணிப்பதற்கு சிரமமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சாலைகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.