திருவந்திபுரம் -பாலூர் செல்லும் சாலையில் அதிகளவில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை இரவு நேரத்தில் வாகனஓட்டிகளை கடிக்க விரட்டுகின்றன. இதனால் அச்சத்தில் அவர்கள் விபத்தில் சிக்கிக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.