திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, ஆங்காடு பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்புறம் மின்கம்பம் ஆபத்தான முறையில் சாய்ந்து கிடந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை மாற்றினார்கள். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.