சிதம்பரம் - திருச்சி பழைய தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் அதிகளவில் செடி, கொடிகள் வளர்ந்து சாலையை மறைத்தபடி செல்கிறது. இதனால் சாலை குறுகி போய் உள்ளதால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.