சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகர் பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள் வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் இவை சாலையில் செல்லும் வாகனங்களை துரத்தி செல்வதால் விபத்துகளும் அடிக்கடி நடக்கின்றன. எனவே சாலையில் திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.