நடுவீரப்பட்டு குயவர் வீதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நீர் ஏற்றும் குழாயில் கசிவு ஏற்பட்டு வருவதால் பாசி படிந்து காணப்படுகிறது. இதனால் குடிநீர் மாசடைந்து வருவதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.