பண்ருட்டி அருகே மணம்தவிழ்ந்தபுத்தூாில் பழுதடைந்த கட்டிடத்தில் நூலகம் மற்றும் தபால் நிலையம் இயங்கி வருகிறது. இதனால் இங்கு செல்லும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே இப்ப விழுமோ? எப்ப விழுமோ? என்ற நிலையில் இருக்கும் பழைய கட்டிடத்தை உடனடியாக இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.