தெருநாய்கள் தொல்லை

Update: 2025-04-13 17:37 GMT

திருச்செங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபகாலமாக தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள் வீட்டில் இருந்து வெளியே வர அச்சப்படுகிறார்கள். மேலும் சாலையில் நடந்து, இரு சக்கர வாகனங்களில் செல்வோரை தெருநாய்கள் கூட்டமாக சேர்ந்து கடிக்க துரத்துகின்றன. அச்சத்தால் வாகனங்களை வேகமாக இயக்குவதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே தெருநாய்களை அப்புறப்படுத்தி கருத்தடை செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.

-தமிழரசன், திருச்செங்கோடு.

மேலும் செய்திகள்