பயன்பாட்டிற்கு வராத நிலையம்

Update: 2025-04-06 12:21 GMT

பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கால்நடைகளை வளர்த்து பிழைப்பு நடத்து வருகின்றன. இந்நிலையில் இவர்கள் பயன்பெறும் வகையில் இப்பகுதியில் பால் குளிரூட்டும் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் நீண்ட நாட்களாக இந்த நிலையம் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்