குடிநீர் இன்றி நோயாளிகள் அவதி

Update: 2025-03-30 12:58 GMT

பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் மருத்துவமனை பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்த நடவடிக்கை எடுத்து, மருத்துவமனை பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்