ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் பஸ் நிலையத்தில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. ஆனால் இந்த நிழற்குடையின் படிக்கட்டுகள் உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள், மாற்றுத்திறனாளிகள் படிக்கட்டுகளை பயன்படுத்த சிரமப்படுகின்றனர். மேலும் இந்த நிழற்குடையை சுற்றிலும் வாகனங்களை நிறுத்தப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் படிக்கட்டுகளை சீரமைக்கவும், வாகனங்கள் நிறுத்துவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.