பண்ருட்டி செட்டிபட்டறை காலனி பகுதியில் அமைந்துள்ள சுடுகாடு கட்டிடம் பலத்த சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள், இறந்தவர்களின் உடலை அங்கு எடுத்து செல்லவே அச்சப்படுகின்றனர். இதை தவிர்க்க அங்கு புதிதாக சுடுகாடு கொட்டகை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.