விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இதனால் சாலையில் செல்ல பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் அச்சமடைந்து வருகின்றனர். மேலும் தெருநாய்கள் வாகன ஓட்டிகளை துரத்தி சென்று விபத்தை ஏற்படுத்துகிறது. எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?