ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு தினமும் வெளிமாநில பக்தர்கள் உள்பட ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஆனால் பக்தர்களுக்கு போதிய அளவில் கழிப்பறை, லாக்கர்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே கோவிலில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.