சங்கராபுரம் அடுத்த செம்பராம்பட்டு பஸ் நிறுத்தத்தில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு பழுதடைந்துள்ளது. இதனால் இரவு நேரத்தில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உருவாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்து உள்ளனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.