பெரம்பலூர் ரோவர் பள்ளி சாலையில் உள்ள முத்துநகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்காக இப்பகுதியில் பொது சுகாதார வளாகம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்த சுகாதார வளாகத்தில் தண்ணீர் வசதி இன்றி பூட்டி கிடக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த பொது சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.