மதுரை நகர் செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு பஸ் நிறுத்தம் பகுதியில் பயணிகள் நிழற்குடை வசதி இல்லை. அதிகளவில் பஸ் போக்குவரத்து நிறைந்த இப்பகுதியில் தினமும் ஏராளமானோர் பயணிக்கின்றனர். இதனால் நிழற்குடை வசதி இல்லாததால் அப்பகுதியில் பஸ்சுக்காக காத்து நிற்கும் பயணிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் தற்போது வெயில் காலம் தொடங்க உள்ள நிலையில் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு புதிய பயணிகள் நிழற்குடை கட்டி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.