விருதுநகர் அருகே பெரிய தாதம்பட்டி கிராமத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை மற்றும் ரேஷன் கடை கட்டிடம் முற்றிலும் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் பஸ் நிறுத்தம் வரும் பயணிகள் அச்சமடைந்து பஸ்சுக்காக வெயிலில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பயணிகள் நிழற்குடை மற்றும் ரேஷன் கடை கட்டிடத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?