பண்ருட்டி பஸ் நிலையம் உள்ளே செல்லும் வழியில் உள்ள நடைபாதையை சிலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். மேலும் சிலர் இருசக்கர வாகனங்களை தாறுமாறாக நிறுத்துகின்றனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமின்றி விபத்துகளும் நிகழ்கிறது. எனவே இதை தவிர்க்க ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.