திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், ஒரக்காடு கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள கல்லுக்கட்டி சித்தர் கோவில் அமைந்துள்ள சாலையில் வேகத்தடை இல்லை. இதனால் இருசக்கர வாகனங்கள் வேகமாக செல்கின்றன. மேலும், அவ்வப்போது சிறுசிறு விபத்துகள் நிகழ்கின்றன. எனவே, அக்கோவில் அமைந்துள்ள சாலையில் வேகத்தடை அமைத்து தர கிராம நிர்வாகம் நடைவடிக்கை எடுக்க வேண்டும்.