மதுரை நகர் தெற்கு மாரட் வீதியில் சாலையில் இருபுறமும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். இதனால் அந்த வழியில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே இதுகுறித்து போக்குவரத்து காவல் துறையினர் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.