அண்ணாகிராமம் ஒன்றியம் பண்டரக்கேட்டை ஊராட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கழிப்பறை கட்டிடம் திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக இருந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழித்து வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே பூட்டிக்கிடக்கும் கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.