குளம் தூர்வாரப்படுமா?

Update: 2025-01-26 18:12 GMT
பண்ருட்டி அடுத்த காடாம்புலியூரில் தாமரைக்குளம் உள்ளது. இந்த குளம் தூர்ந்துபோய் காணப்படுவதால் மழைக்காலங்களில் குளத்தில் அதிக அளவில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க தூர்ந்துபோன குளத்தை தூர்வார வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்