பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக இலவச கழிவறைகள் இடிக்கப்பட்டது. இதனால் பயணிகள் இயற்கை உபாதை கழிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே பஸ் நிலையத்தில் தற்காலிகமாக நடமாடும் கழிவறைகளை அமைக்க வேண்டும். மேலும் கட்டண கழிவறைகளை இலவசமாக பயன்படுத்த நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.