சத்தியமங்கலம் அருகே அரியப்பம்பாளையத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிந்து தொல்லை கொடுத்து வருகின்றன. இதனால் அந்த வழியாக செல்ல மாணவிகள், பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?