திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, கோட்டக்கரை பஸ் நிறுத்தம் அருகில் உள்ள மின் கோபுர விளக்கு எரியவில்லை. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து புதிய கோபுர விளக்கு மாற்றினர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.