ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் கொசுத்தொல்லை அதிகளவில் உள்ளது. இதனால் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் சரியான தூக்கமின்றி தவிக்கின்றனர். மேலும் காய்ச்சல் போன்ற தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கொசுமருந்து அடித்து கொசு உற்பத்தியை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.