பயனற்ற கிணறு

Update: 2025-01-12 11:35 GMT

பெரம்பலூர் மாவட்டம், எசனை அம்பேத்கர் நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பல ஆண்டுகளுக்கு முன்பு பொது கிணறு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கிணறு தற்போது பயன்பாடு இன்றி அதன் மேற்பகுதிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அவற்றின் உள்ளே குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள், கழிவுகள் கொட்டப்பட்டு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இப்பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பயனற்று உள்ள இந்த கிணற்றை மூட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்