மதுரை நகர் ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் நிறைந்து காணப்படும் அப்பகுதியில் சாலையில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிவதோடு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை துரத்தி சென்று அச்சுறுத்துகின்றது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு அப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.