கடலூர் நேரு நகர் புதுக்குப்பம் பகுதியில் ஏராளமான பன்றிகள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இதனால் அங்கு அடிக்கடி விபத்து ஏற்படுவது மட்டுமின்றி, சுகாதார சீர்கேடும் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே அதிகாரிகள் விரைந்து பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.