திண்டுக்கல் மேட்டுப்பட்டி எனாமல் பேக்டரி சாலையோரத்தில் வாய்க்கால் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் அதன் பிறகு அந்த பள்ளம் சரியாக மூடப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.