திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம் பகுதியில் இருந்து அண்ணா சதுக்கம் வரை தினமும் மாநகர பஸ்கள்(40 எச்) இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் குறைவான பஸ்கள் இயக்கப்படுவதாக பயணிகள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். இதனால் பள்ளி-கல்லூரி மாணவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். நீண்ட நேரம் காத்திருப்பதோடு, பஸ்சில் கூட்டம் அதிகமாக இருப்பதால் முதியவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, போக்குவரத்துத்துறை அதிகாரிகள் இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க முன்வர வேண்டும்.