ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் பயணிக்கும் வாகனங்களின் குறுக்கே பாய்வதால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. மேலும் சாலையில் படுத்து போக்குவரத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்துகிறது. எனவே நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.