தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அந்தோணியார் கோவில் தெரு, இந்திராநகர்,பழைய வீட்டு வசதிவாரியம், பெரியகடை தெரு, ஆர்.வி.நகர் ஆகிய இடங்களில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் நடந்து செல்பவர்களை துரத்தி சென்று கடிக்கின்றன. வாகனங்களை விரட்டி செல்வதால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இதன்காரணமாக மேற்கண்ட பகுதிகள் வழியாக செல்பவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.