பயன்பாட்டில் இல்லாத புறக்காவல் நிலையம்

Update: 2024-09-15 17:48 GMT

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் போலீஸ் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள எரகுடி புறக்காவல் நிலையம் பயன் பாடின்றி உள்ளது. இரண்டு பேரூராட்சிகள், 16 ஊராட்சிகளை கொண்ட உப்பிலியபுரம் ஒன்றிய பகுதிகளுக்கான சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து பணிகள் உப்பிலியபுரம் போலீஸ் நிலைய கட்டுப்பாட்டில் உள்ளது. பணிகளை விரிவு படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட இப்புறக்காவல் நிலையம் போலீசார் பற்றாக்குறையால் மூடி கிடப்பது சமூக ஆர்வலர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. புளியஞ்சோலை சுற்றுலா தளத்தின் பாதுகாப்பை மேம்படுத்த எரகுடி புறக்காவல் நிலையத்தை பயன்பாட்டில் கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்