மாணவர்கள் அவதி

Update: 2024-09-15 12:00 GMT

திருவள்ளூர் மாவட்டம், தண்டலம், காக்கவாக்கம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சிறிய மழை பெய்தாலும் தெருவில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பள்ளி மாணவர்கள், குழந்தைகள் என அனைவரும் மழை காலங்களில் தெருவை கடந்து பள்ளிக்கு செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் வாகனத்தில் செல்பவர்களும் மேடு, பள்ளம் இருப்பது தெரியாமல் கீழே விழும் நிலை உள்ளது. எனவே சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்